ஆங்கில, இந்தி மீடியாக்களில் ரஜினிகாந்த் ஜோக்குகள் மிகவும் பிரபலமானவைகள். ரோபோ படம் இந்தியில் வந்தபின் தொடர்ந்து இந்த ஜோக்குகள் வெளியாவது அதிகரித்துள்ளன. குஷ்வந்த்சிங் ஜோக் மாதிரி பின்நாளில் பிரபலமடைய கூடுமென நினைக்கிறேன். ரஜினிகாந்தை அங்கு நடிகர் கோவிந்தா ரேஞ்சுக்குதான் பார்க்கிறார்கள். ஒரு இணையதளம் தொகுத்து முக்கியமானவற்றை அளித்துள்ளது. ஆங்கிலத்திலேயே அவற்றை அளிக்கிறேன், நன்பர்கள் முடிந்தால் தமிழ்படுத்தி அனுப்பவேண்டுகிறேன்.
Rajinikanth doesn’t wear a watch. He decides what time it is.
Rajinikanth has already been to Mars, that’s why there are no signs of life there.
Rajinikanth killed the dead sea.
If you spell ‘Rajanikant’ wrong on Google it doesn’t say, “Did you mean Rajinikanth?” It simply replies, “Run while you still have the chance.”
Rajinikanth can play the violin with a piano
Rajnikanth once wrote a cheque, the bank bounced!
Micheal Jordan to Rajini: I can spin a ball on my finger for over two hours. Can you?
Rajni: Rascala; how do you think the earth spins!?
Rajinikanth once ordered a plate of idli in McDonald’s, and got it.
If Rajnikant was born 100 years earlier, British would have fought to get independence from India.
When Rajnikant logs on to facebook.com, facebook updates its status message!
Rajni once killed 20 men just by saying "BANG"
Rajinikanth knows Victoria’s secret.
Rajinikanth can divide by zero.
Rajinikanth has counted to infinity, twice.
When Rajinikanth gives you the finger, he's telling you how many seconds you have left to live.
சுந்தர்சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற திரைபடத்தை பற்றி இணையத்திலும் போதாததற்கு முகநூலிலும் அன்பர்கள் சிலாகித்து எழுதியதைக்கண்டு அதைப் பற்றிய விமர்சனங்களை இணையத்தில் தேடி படித்தது நான் செய்த தவறாக இப்போது நினைக்கிறேன். முதலில் சுந்தர்சி படங்கள் அது நடிப்பாக இருந்தாலும் சரி, இயக்கமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் வருடங்களுக்கு முன் வெளியான தமிழ்படத்தின் அல்லது வேறு மொழிப்படத்தின் அப்பட்டமான தழுவழோ அல்லது உரிமை பெறாத ரீமேக்காகவோ இருக்கும் என்பதற்கு மாற்றுகருத்து இருக்க முடியாது. அதை மறந்து தேடியதை தவற்றின் முக்கிய அங்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
எல்லா விமர்சன எழுத்திலும் இணையஎழுத்து அன்பர்களின் எழுத்திலும் பல்லவியை மாற்றாமல் எழுதியிருந்தது சற்று ஆச்சரியம் தான். கதை ஆரம்பத்தை கூறக்கேட்டதுமே இது அல்பசினோ நடித்த The Carlito’s way எனும் படத்தின் கதையல்லவா என எண்ணத்தோன்றியது. மேலும் தேடியபோது ஆமாம் இது அந்த படத்தின் கதைதான் என்று தெரிந்தது. அதில் தொழிலை விட்டு விலகிவிட நினைக்கும் கடத்தல்காரன், இதில் தாதா, அதில் காதாநாயகி கிளப்களில் ஆடும் டான்சர், இதில் சினிமாவில் குரூப் டான்சர், அப்புறம் வடிவேலுவின் காமடி ட்ராக்கை இணைத்திருப்பது, இவைகள் தான் வித்தியாசம். ஆரம்பத்தில் ரயில்நிலையத்தில் கூடஇருந்தவனே கத்தியால் குத்தப்பட்டு, நிலைதடுமாறி பழைய நினைவுகளை அசைப்போட்டபடி மருத்துவமனையில் இறக்கும் அதே கதைதான் இங்கும்.
அல்பசினோ, கமலஹாசனுக்கு குரு மாதிரி அவரை நினைத்து தமிழில் பலபடங்களை செய்திருக்கிறார். அல்பசினோவின் வசன உச்சரிப்பும், நடையும் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவை.அவற்றை, மொக்கையாக வரும் சுந்தர்சி எப்படி செய்திருப்பார் என்பதை நினைக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆங்கில, சீன சண்டைப் படங்களை பார்க்காத/பார்த்திராத ஒரு ரசிகர் கூட்டமொன்று விஜயகாந்த் படத்தின் சண்டைக் காட்சிகளை அற்புதம் என்று கூறுவது போலத்தான் நகரம் படத்தை அற்புதம், அருமை என்று சிலாகிப்பது. நடுநடுவே அய்யய்யோகளும் அம்மம்மாக்களும் வேறு. தமிழ் சினிமாவில் நல்ல ஒரிஜினல் படங்கள் வருவது எப்போதாவதுதான் நிகழ்கின்றன, மற்ற நேரங்களில் இந்தமாதிரி 'சுட்ட' படங்கள்தான் வரும், அதையும் சிலாகித்து குதிப்பதை 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பது மாதிரியானது என்று தெரிந்ததுதானே?
வரவிருக்கும மன்மதன் அம்பு படத்திற்கு கமல் எழுதிய பாடல் ஒன்று இணையத்தில் கிடைத்தது. சினிமாவில் மட்டுமல்ல காதல் மன்னன், நிஜத்திலும் தான் என்று என்னத்தோன்றும் வரிகள்.
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால் களங்கம் உள்ளவள் எச்சரிக்கை உடனே கையுடன் கைகோர்த்தாளா? ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை ஆடை களைகையில் கூடுதல் பேசினால் அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை கவிதை இலக்கியம் பேசினளாயின் காசை மதியாள் எச்சரிக்கை உன்னுடன் இருப்பது சுகமென்றாளா உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக்கோள் கூட்டல் ஒன்றே குறியென்றானபின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்? யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள் இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
வாழ்க்கை தாகம், சுதந்திர தாகம் என்று பொருள்படும் இந்த தாகம் எனும் நாவல் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி மாரப்பன் எனும் விவசாயின் வாழ்க்கையையும் இரண்டாம் பகுதி தாழ்த்தப்பட்ட அடிமைகளின் வாழ்க்கையையும், மார்க்ஸிய முறையில் எழுச்சி பெறுவதையும் கூறுகிறது. இரண்டாம் பகுதியை படிக்க ஆரம்பித்ததும் 290 பக்கங்கள் கொண்ட முதல் பகுதி ஏன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது எனற குழப்பம் ஏற்படுகிறது.அத்துடன் மாரப்பனின் இத்தனைநீள கதை தேவையா என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அதிக விவரங்களும், வர்ணணைகளையும் கொண்ட ஆரம்பபகுதிகளை படிக்கும்போது சலிப்பும்,அயர்ச்சியும் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் அதன் பின்னால் நாம் கண்டிராத வாழ்க்கை முறையையும், புதிய அனுபவங்களையையும் பெறுகிறோம் எனும்போது புத்தகத்தை கீழே வைக்க மனம் வருவதில்லை.
தஞ்சைபகுதி விவசாயியைவிட ஒருபங்கு கடின உழைப்பை செலுத்தவேண்டிய நிலையில் கொங்குமண்டல விவசாயியான மாரப்பனின் வாழ்க்கைமுறை துயரம் நிறைந்தது. அதனுடே அவன் வாழ்க்கை செல்கிறது. மனைவி, குழந்தைகள் என்று இருந்தாலும் நிலத்தினுடன் அவன் கொள்ளும் உறவு அலாதியானது. மாரக்காள், கோமாளிக் கிழவர் பாத்திரங்கள் மிக அழகாகச் உருவாக்கப்பட்டுள்ளன.கோமாளிக்கிழவர் பேசு பேச்சுக்கள் ஒரு வயோதிகரிடம் கதை கேட்ட நிறைவை அளிப்பவை.
களப்பணி செய்து நாவல் எழுதும் வழக்கம் கொண்ட சின்னப்பபாரதியின் மற்றய கதைகள் போல இதுவும் அமைதிருக்கிறது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன் போன்றவர்கள் எழுதும் பாணியிலான நாவல்தான் என்றாலும், அதிலிருந்து வேறுபடும் விசயஙகளும் உள்ளன. கிராமத்தில் கருகலைப்பிற்கு எருக்கஞ் செடியை உபயோகித்தல், அடிமைகளின் திருமண உறவுகள், என்று பல அத்தனையும் புதிய நாம் கேட்டிராத விசயங்கள். இதற்க்காக ஆசியரரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
படிக்க நினைத்திருக்கும் நாவல்கள், நூல்கள் என்று படிக்காமல் விடுபட்டுப்போன முக்கியமான நூல்களின் ஒரு லிஸ்ட் எப்போதும் என் வசம் இருக்கும். சிலிகான் ஷெல்ப்பின் ஒரு இடுகையை பார்த்தும். என் லிஸ்டை எழுதிப் பார்க்கலாமென்று தோன்றியது. இந்த புத்தக கண்காட்சியில் சென்னை வந்து வாங்கிவிடலாமென்றும் இருக்கிறேன்.
நாவல்கள்
1.தலைமுறைகள் - நீல. பத்மநாபன்
2.பள்ளி கொண்டபுரம். - நீல. பத்மநாபன்
3.பதினெட்டாவது அட்சக் கோடு - அசோகமித்திரன்.
4.வானம் வசப்படும் - பிரபஞ்சன்.
5.மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.
6.ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திராபார்த்தசாரதி.
பசங்க படத்திற்கு விருதுகள் கிடைத்திருப்பது சந்தோஷமளிக்கிறது. பசங்க சிறுவர்களுக்கான படமில்லை, ஆனால் சிறுவர்களைப் பற்றிய படமெனத் தோன்றுகிறது. சிறுவர்களைப் பற்றிய படமென்பதனால் அதில் விரசம் குறைந்து கதையில் மீதான கவனத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. வெளிவந்தபோதே இதற்கெல்லாம் எங்கே மக்களிடம் வரவேற்பு கிடைக்கபோகிறது எனத் தோன்றியது. மக்களிடம் நல்ல வரவேற்பும், இப்போது விருதும் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி எற்படுத்துகிறது.
மிக எளிய கதை, அதை நகர்த்தி சென்ற விதமும், காட்சிகளில் புதுமையும் படத்தை வேறு இடத்தில் வைத்து பார்க்க வைத்துவிட்டது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் கொள்ளும் காதலை செல்போனின் ரிங்டோன் முலமாக பார்வையாளர்களை புரியவைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மூலமாக இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. இப்படத்தின் மற்றோரு சிறப்பு வசனம். 'பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு ஒரு மனசு வேணும், அது உங்ககிட்ட இருக்கு' படம் பார்த்து இத்தனை நாளாயினும் ஞாபகமிருக்கும் வசனமிது.
சிறந்த வசனகர்த்தா விருதும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. பசங்க டீமிற்கு வாழ்த்துக்கள்.
இணையத்தில் சுட்ட கி.ரா. அவர்களின் சிறுகதை பற்றிய ரகசியங்கள், சிறுகதை எழுதமுனையும் அனைவருக்கும் பயனளிக்கும், இங்கே வெளியிடுகிறேன். இதில் 2ஆம் பாயின்ட் எனக்கு பிடித்த பாயின்ட்.
1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ்.
ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.
2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான்காண்பிக்கும்; கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிடகடைசி வாக்கியம்தான் முக்கியம் - தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலைசெய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கடேசியில் கண்களைத் திறக்கிற மாதிரி!
3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவேஇல்லாமல்கூட கதை எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படிவேண்டுமானாலும் கூந்தலை முடிந்து காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள்அடக்கம்.
4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான்கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் எழுதப்பட்டகருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம். இன்றையதேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதேஇல்லை. ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப்பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித்தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள் கொடுப்பேன்.
5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக்கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும்.அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப்போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மைசெய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச்சுற்றி கிடப்பதுபோல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மனஅறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.
6. கருக்களில் நாலு வகைஉண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில் எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாகஅனுபவித்தது சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.
7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக்கொண்டு தங்கள் தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும்அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை.
அசோகமித்ரனின் சிறுகதை விதிகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானவை சில
1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடியமற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'
2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்துவிட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம்கொள்கிறது.இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்குமிகவும் அவசியம்.
3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில்எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்தஎழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.
4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒருபடைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும்வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரியவேண்டும்.
5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும்தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்லசிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோதகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச்செய்வதுதான் பக்குவமான படைப்பாற்றலுக்கு அடையாளம்.
6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை.அதுஅவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது.இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ளகதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது.
கே.எம். மாத்யூ என்பவரைப்பற்றி, அவரது மரணத்திற்கு பின்னால், தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிப்பட்டு வருகின்றன. கேரளாவிலும், பத்திரிக்கை துறையிலும் அவர் முக்கியமானவரா?, அவரது சுயசரிதையும் முக்கியமானதா?, அவரைப்பற்றி உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அவரைப் பற்றிய அல்லது அவரைப்ப்ற்றிய புத்தகங்கள் போன்ற விவரங்களை எனக்கு தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.
அன்புள்ள அசோக் குமார்
டாக்டர் கெ.எம்.மாத்யூ மலையாள மனோரமா மற்றும் எம்ஆர்எஃப் டயர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். மலையாளமனோரமாதான் கேரளத்தில் முதலிடம் வகிக்கும் நாளிதழ் மற்றும் பிரசுர நிறுவனம். அதன் ஆசிரியராக அவர் இருந்தார். திரு மாத்யூ தனிப்பட்ட முறையில் சீரிய இலக்கியத்தில் ஆர்வமுடையவர். இலக்கியவாதிகளை ஆதரித்தவர். மலையாள மனோரமா குழுமத்தின் பாஷாபோஷினிதான் கேரளத்தின் முதன்மையான இலக்கிய இதழ். அவரது சுயசரிதை கடந்த அரைநூற்றாண்டு கேரள இதழியல் -பண்பாட்டு சரித்திரத்தை ச்சொல்வதும்கூட. அவருக்கு இருக்கும் முக்கியத்துவம் அப்படி வந்ததே
ஜெயமோகன் சிறுகதை எழுதுவதைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். அவர் கூறிய, சிறுகதைப் பற்றிய, இந்த மூன்று விசயங்கள் எனக்கு பிடித்தமானவைகள். மற்ற விசயங்களை அவரது இணைய தளத்தில் தேடி கண்டுகொள்ளலாம். அந்த மூன்று:
எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்.” கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்.” கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
எழுத்தாளர் சுஜாதா கூறும் சிறுகதைக்கான யோசனைகள் கொஞ்சம் பிரபலமானவை, இலக்கிய எழுத்துகளுக்கு இவைகள் பெரிதும் பயன்படப் போவதில்லை என்றாலும் வெகுஜன எழுத்துகளுக்கு பயன்படும். குறிப்பாக 8வது விதி, இது இலக்கிய எழுத்துக்களுக்கு சுத்தமாக பயன்படாது. மற்றபடி படித்துப் பார்க்கலாம்.
2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய்ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரிவீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டிஆசிரியருக்குக் கடிதம்எழுதக் காத்திருக்கும்.
3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள்வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள்சொந்த ஊர், சொந்த வீதி…
4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சிசெய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்துஎழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத்தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்துநாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.
6. ஒரு வார்த்தையைஒரு கதையில் ஒரு முறைக்கு மேல்பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்தபரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள்மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்றவார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச்சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோபெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப்பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின்அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர்வைப்பது அல்ல.
8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதேகதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச்சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது.எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ்சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும்மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
சிறுகதையின் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு நம் மனம் எப்போதும் ஏங்கியபடியே இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ பிரபலமான எழுத்தாளர் கூறியதை கவனித்தபடி இருக்கிறோம். அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt vonnegut) கூறிய 8 விதிகளை இப்போது பார்ப்போம். இணையத்தில் கிடைத்த அந்த விதிகள் இதோ.
வானகட் கூறுகிறார்:
சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:
1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!
4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் - பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!
5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!
7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!
அவளுடையவீடுரயில்வேகுவார்ட்டஸ்தண்டவாளங்களுக்குபக்கத்திலேயேஇருந்தது. தாழ்வாகஒன்றன்பக்கத்தில்ஒன்றாகஅமைதியானசூழ்நிலையில்அமைந்தவீடுகள், ரயில்கள்போகும்நேரங்கள்தவிரமற்றநேரங்களில், காகங்கள், குயில்கள்போடும்சத்தங்கள்தான்கேட்கும். அந்த ரம்மியமான சூழ்நிலையை நினைக்க இப்போதும் இனிமையாக
இருக்கிறது.ரயில்கள் எப்படி ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொரு
தண்டவாளத்திற்குபோகின்றன என்று
ஆர்வமாக அவளிடம் கேட்டிருக்கிறேன், அவளுக்கு பழசாகிப் போனவிசயமானதால், சினிமா, கிசுகிசு போன்ற
வேறு சுவாரஸ்யமான விசயங்களே பேசுவாள்.
பள்ளிக்கு வரும்போது
அமைதியாக வருவாள்போகும்போது அவள்
செய்யும் அளும்பு தாங்கமுடியாது.அப்போது தாவனியை
ஒத்தையில் அணிந்து செல்வாள். ரவிக்கையின் கட்டு மிக கிழே இறங்கி இறுக்கமான சதை
பிளவை மெல்லிய தாவணி வெளிக்காட்டியபடி இருக்கும்.வெளியே வந்ததுமேஅவள்
வெளிப்படையாக பேசும்வார்த்தைகளும் செய்கைகளும் எங்களுக்கு அதிர்ச்சியை
அளித்தாலும் ரசிக்கவேசெய்தோம்.எல்லாத்தையும்
வெள்ளேத்தியாக எல்லோரிடமும் கூறிவிடுவது அவள் வழக்கம்.யார் பக்கத்தில் இருக்கிறார்கள் இல்லை என்பதை அவள் கவனிப்பதில்லைகுவார்ட்டஸில் இருக்கும் ஒரு பையனோடு ஏற்பட்ட பழக்கத்தை ஒருநாள் கூறும்போது
அதிகமாகவே அதிர்ச்சியாக இருந்தது. அது சாதரணமாக காதலாகவோ நட்பாகவோ இருந்திருந்தால்
பெரியதாக தோன்றியிருக்காது. அதைவிட அதிகமானது எனக் கூறக்கேட்டதும் என்ன
சொல்வதென்றே தெரியாமல் இருந்தோம். ஆனால் அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒருநாள் பஸ்ஸில் வந்து இறங்கும்போது ஒரு பையனை அறிமுகப் படுத்தினாள். என்னவோ
ஒரு பெயரை சொன்னாள். அவனை பார்த்ததும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மாமா
ஒருவர் தன் பையனை திட்டும்போது 'காடுப்பயலே' என்று திட்டுவார். அதன் அர்த்தம் அவனைப் பார்த்தபோது தோன்றியது. நல்ல
உயரத்தில் கட்டுமஸ்தான பெரிய ஆள் மாதிரியிருந்தன். அவசர அவசரமாக விலகிஓடியது
நினைவிருக்கிறது.அப்படி அவனிடம் என்ன கண்டுவிட்டாள் என்பது தெரியவில்லை.
மிட்-டெர்ம் தேர்விற்காக குழுவாக உட்கார்ந்து விவாதித்து கொண்டிருந்தபோது, கைபிடித்து இழுந்து
தனியே அழைத்துச் சென்றாள். மிகமுக்கியமாக பாடத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது
அவள் இப்படி செய்தது எரிச்சலாக இருந்தது. ஒரு கழிவறைக்கு பக்கத்தில் நிற்கவைத்து
கண்டதையும் பேசிக்கொண்டிருந்தாள்.நிலைகொள்ளாமல் இப்ப என்னவேணும் உனக்கு என்றேன். 'தள்ளிப் போயிருக்குபா' என்றாள். 'என்ன?', ‘ஆமா, மூணுமாசமா இருக்குப்பா' என்றாள். என்ன
கூறுகிறாள் என்பதை புரிந்துகொள்ள சிலநிமிடங்கள் ஆகியது. அவள் முகத்தில் எந்த
சலனமும் இல்லை. உண்மை சொல்கிறாளா அல்லது விளையடுகிறாளா என்று கண்டுகொள்ளவும்
முடியவில்லை. நடந்து செல்லும் வேறு பெண்கள் காதில் விழுந்துவிடக்கூடும் என்ற பயமில்லாமல்
உளறிக்கொண்டிருந்தாள். அந்த இக்கட்டான சூழ்நிலையை அருவருப்பாக உணர்ந்தேன்.
'இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்ற, உங்கமாகிட்ட போய்
சொல்லு'
'அது... சொல்லமுடியாதுப்பா ' என்றாள்.
'என்னமோ செய், எனக்கு தெரியாது' என்று போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டதை வந்து சொல்வாள் என்று இருநாளாக நினைத்துக்
கொண்டிருந்தேன்.
அவள் எப்போதும்போல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க கூடாது, பேசக் கூடாது
என்றேண்ணியிருந்தேன். ஆனால் மனசு கேட்காமல் அவளிடம் சென்று 'என்ன சொன்னியா' சென்றேன்.
லேசாக கண் கலங்கினாள். கையால் கண் ஓரங்களை தாவணியால் துடைத்தாள். அவனை
கல்யாணம் கட்டிக்கலாம் என்கிற அவள் நினைப்பு மாறிப்போயிருந்தது.அவளிடம் என்ன சொன்னாலும் புரியாதுபோல் தோன்றியது. நாட்களை கணக்கிட போது மே
அல்லது ஜூனில் பிரசவம் இருக்ககூடும் என நினைத்தேன்.
'அப்பா வயித்த தள்ளிக்கிட்டு வந்து
பரிச்சை எழுதப் போறியா' என்றேன்.
சட்டென தலை தூக்கி 'ஏன் எழுதுனா என்ன' என்றாள்.
ஓங்கி அறையலாம் போல் இருந்தது. 'சீ... போடி' என்று எழுந்து போய்விட்டேன்.
மாலை ஆவளுடன் பஸ்சில் என் வீட்டையும் தாண்டி அவள் வீடுவரை சென்றேன். 'எங்க வீட்டுக்கா வர்ற' என்று கேட்டுக்
கொண்டிருந்தாள். 'எல்லா வேறு ஒருத்தர் வீட்டுக்கு போறேன், அப்படியே உங்க வீட்டையும்
பாத்துடலாமே' என்று அவளுடனேயே சென்றான்.
அவள் வீடு போனபோது அவள் அம்மா கடலை தின்றுக் கொண்டிருந்தார். எப்படி
கூறுவதென்று தெரியாமல் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து, கூறிவிட்டேன். முதலில் புரியாமல்
முழித்துவிட்டு திடிரென மயக்கம் வராத குறையாக கடலை பொட்டலத்தை தூக்கிப்
போட்டுவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார். 'என்னம்மா சொல்ற' கண்கள் கலங்கி ஒரு
மாதிரி ஆகிவிட்டார். 'என்னடி இது' என்று அவளிடம் கேட்க உம்மென்ற முகத்துடன் 'ஆமாம்' என்றாள். அவள் தங்கையும் கூடவே
அவளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவள் வீட்டில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள், நான் வந்து
சொல்லிவிட்டதற்காக கோபப்படுவாள் என நினைத்தேன். ஆனால் எப்போது போலவேயிருந்தாள்.
மாலை அவள் அம்மாவும் அத்தையும் வந்து விட்டார்கள். அந்தப் பையன் ஓடிவிட்டதாகவும், அவர்கள் வீட்டில்
சென்று கேட்டதற்கு அடிக்க வருகிறார்கள் என்றும், அவர்கள் பேச்சில் புரிந்து கொள்ள
முடிந்தது. கருகலைப்பிற்கு அவள் சம்மதிக்க வில்லை. 'நீ சொல்லம்மா' என்பதுதான் அவர்கள்
வேண்டுகோள். முடிந்தவரை எடுத்துக்கூறினேன்.இந்த தேர்வு மிக முக்கியமானது, மற்றதையெல்லாம்
அப்புறம் முடிவு செய்துகொள்,நாளை கடத்தாதே என்றேன். பேசாமல் நின்றாள். 'நா அவகிட்ட நாளைக்கு பேசுறேன், நீங்க அழைச்சுக்கிட்டு
போங்க' என்றேன்.
'அடுத்த நாள் அவளிடம்
நீ பண்ணப்போற இந்த காரியத்தால உங்க குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம்
யோசிச்சுப்பாரு உங்க அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தலைகுனிவு, நா சொன்னமாறியே அவன்
ஒடிப் போயிட்டான் பாத்தியா, இனிமேலும் அவன் மேல நம்பிக்கை வைச்சிருக்கியா' நீண்ட இடைவெளிக்குப்பின், கடைசியாக அவள் ஒத்துக்கொண்டு போனாள். கண்கள் கலங்கியிருந்ததுபோல் இருந்தன.எப்போதும் இருக்கும் துள்ளல் குறைந்துபோய் எழுந்து போனாள்.
அவள் எடுத்துக் கொண்ட 15 நாள் விடுமுறையை மலேரியா, பேதி என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிவந்தோம்.15 நாள் கழித்து வந்தபோது, அவள் முகம் வெளுத்திருந்தது. அவள் விசயம் தெரிந்த இரண்டொரு பெண்கள் அவளை
சூழ்ந்து ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.நானும் பேசினேன், என் கண்களை சந்திக்க
அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. பின்னாலில் சிங்காரிப்பதில் அவள் ஆர்வம் குறைந்து, படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
சுனிதா நீங்களாக, மற்ற பெண்கள்கூடிப் பேசும்போது அவளைப்பற்றிய வார்த்தை இல்லாமல் இருப்பதில்லை.
அவளைப் பற்றிய பேச்சு இல்லையென்றால் அப்பேச்சு சுவாரஸ்யமாக அமைவதில்லை. அதில்
முக்கியமானது அவள் வருங்காலத்தைப் பற்றியது.
‘இனிமே குழந்தை
பெத்துக்க முடியாதம்பா, ரொம்ப சின்ன வயசிலேயே கலச்சிட்டதால, இருதய பிரச்சனை இருக்கிறதால இன்னிமே குழந்த பெத்துக்க முடியாதம்பா, அப்படியேஉண்டானாலும் அது அவ உயிருக்கு ஆபத்தாம்பா' என்று விஜயா நீளமாக
கூறிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பற்றிய விசயங்கள் சுவாரஸ்யம் இழப்பதற்கு கொஞ்ச நாள் ஆகியது.
கூட்டு படிப்பிற்காக விஜயாவுடன் சுனிதா விட்டிற்காக வந்தபோது அவளின் அன்றைய
பேச்சு மிக அந்தரங்கமாக அவள் மனக்குறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.‘இனிமே நா குழந்தையே
பெத்துக்க முடியாதாம்பா' என்பதுதான் அதில் முக்கியமான விசயம். சாதாரணமாக சமாதானப் படுத்திவிட
முடியவில்லை. 'இப்போதைக்கு படிப்பில் கவனமாயிரு, பின்னாடி அதைப்பத்தி யோசிச்சிக்கலாம்'. என்று அவள் மனதை திசைதிருப்ப
மட்டுமே முடிந்தது.இந்நிலையிலும் விஜயா 'நா இவகூட படிக்கிறேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிறாதப்பா' என்றாள். அனைத்தையும் அவள்
அம்மாவிடம் கூறிவிட்டிருக்கிறாள். 'இதுதான் என்வேல பாரு, நீ வந்தது எங்கம்மாகூட கதையடிக்க, அதைப்போயி செய்யி'
கானாமல் போன அந்தபையன் அடுத்த வருடமே அவளை பின் தொடர்ந்தான். 'அவன் பின்னாடியே
வாறாம்பா அவன போ சொல்லுப்பா' ஒருநாள் என்னிடம் வந்து கூறிக்கொண்டிருந்தாள். பஸ் ஸ்டாப்பில் வைத்து
அவனைப்பார்த்த போது முன்னிலும் கம்பீரமாகிவிட்டதுபோல் தெரிந்தது.நாங்கள் போன பஸ்ஸிலேயே இரண்டுநாள் எங்களைபின் தொடந்து வந்தான். மூன்றாம் நாள்
வந்தபோது முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டோம். அவனும் இறங்கினான்.
நேராக அவனிடம் சென்று 'ஏன் அவ பின்னாடியே வரீங்க உங்களுக்கு வேற வேல இல்லையா'
அப்ப பிரச்சனை வரும்போது எங்க போயிருந்திங்க, அவ இனிமேலாவது
நல்லாயிருக்கட்டும்,
அவள இனிமே தொந்தரவு பண்ணாதிங்க' என்று கூறி விறுவிறுவென்று அவளை அழைத்து வந்தேன்.
'என்னப்பா இப்படி
பேசிட்ட, அவன் முரடன்பா,
ஒன்னைய அடிச்சாலும் அடிப்பான்'.
'இனிமே அவன்
ஒம்பின்னாடி வரமாட்டான் பயப்படாதே' என்றேன்.
பள்ளிப்படிப்பு முடியும் வரை அவன் வரவேயில்லை. அப்பாவிற்கு மாற்றலாகி வேறு ஊர்
வந்துவிட்டோம். அப்புறம் அவளிடம் தொடர்பேயில்லை. அப்பாவின் அலுவலகம் மூலமாக் இந்த
ஊர் விலாசத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு எப்போதும்போல் அப்பா வரவில்லை. நானும் அம்மாவும் மட்டும்
சென்றோம். எங்களை கண்டதுமே சுனிதாவின் அம்மாவிற்கும் அத்தைக்கும் சந்தோஷம்
தாளவில்லை. அவள் அம்மாவிற்கு வெள்ளைமுடி அதிகமாகிவிட்டிருந்தது. அத்தை கண்ணாடி
போட்டு வேறுமாதிரி ஆகியிருந்தார்.அவர் மகனைத்தான் திருமணம் செய்கிறாள் சுனிதா.
கொஞ்ச நேரம் பேசியபின் 'சுனிதா அந்த ரூமிலே இருக்கா, போய் பாரும்மா' என்றார். மணப்பெண் அறைக்கு சென்றபோது, நெத்திசுட்டி பில்லாக்கு வைத்து
பாவாடை ரவிக்கையுடன் நின்று கொண்டிருந்தாள் சுனிதா. அவளுக்கு புடவை உடுத்திக்
கொண்டிருந்தாள் ஒரு பெண்.
என்னைப் பார்த்துமே பெரிய திறந்த வாயுடன், 'ஏ... எப்ப வந்த' என்றாள், சேலை கட்டுபவளுக்கு ஈடுகொடுத்தபடியே என்னிடம் பேசிக்
கொண்டிருந்தாள்.இன்னும்
அழகாகிவிட்டிருந்தாள். சற்று பெருத்து முடிநல்லஅடர்த்தியுடன் லச்சணமாக மாறியிருந்தாள். அவள்
அலங்காரத்திற்கு கொஞ்சம் உதவி செய்துவிட்டு, 'சரி நா வெளியில போய் உட்காந்திருக்கேன்' என்றுகூறி கிளம்பினேன். [உயிர் எழுத்து இதழில் வெளியான கதை]-o0o-