Friday, January 8, 2010

வாசவேச்வரம் - கிருத்திகா: விம‌ர்ச‌ன‌ம்


கிருத்திகா எழுதிய இந்நாவல் 1966ல் முதல் பதிப்பாக அவருடைய 50வது வயதில் வெளிவந்துள்ளது. நாப்பத்திமூன்றாண்டுகளுக்கு பின் இப்போது படிக்கும்போதும் புதிய நாவலொண்றை படிக்கும் மனநிலையே ஏற்படுகிறது. அழகான சொற்கள், வரிகள், காட்சி சித்தரிப்புகள் என அனைத்திலும் புதுமையை கொண்டுள்ளது இந்நாவல். இப்போது புகழிலிலிருக்கும் பல எழுத்தாளர்களின் எழுத்து சாயல்கள் அவர் எழுத்துகளில் உள்ளன. அவரே இவர்களின் ஆதர்ஷயமாக‌ இருப்பார்.

ஆண்கள் பெண்கள்மேல் கொள்ளும் மயக்கத்தை சித்தரிப்பதிலும், பெண்கள் ஆண்கள்மேல் கொள்ளும் மயக்கத்தை சித்தரிப்பதிலும், ஒரு பெண் எழுத்தாளர் இந்த அளவிற்க்கு எழுதமுடியுமா? அதுவும் 66ல். மிகப் பெரிய ஆச்சரியம்தான். எழுதி எழுதி தீராத வார்த்தைகள் அவை. நாவலுக்கே உரிய பண்புகளுடன் பரவிச் செல்கிறது. ஒரு காட்சியிலிருந்து மற்றோரு காட்சிக்கு எத்தனை அழகாக தாவிச் செல்கிறார் ஆசிரியர்.

கதாகாலச்சேபத்தில் ஆரம்பித்து கதாகாலச்சேபத்தில் முடிகிறது நாவல். முதலில் கதாகாலச்சேபம் முடிந்தபின் மக்கள் கொள்ளும் காமத்தை மிக அற்புதமாக சொல்கிறார். அதைவிட பெண்கள் ஆண்கள் அவர்களை 'கவனிக்காமல்' செல்லும்போது கொள்ளும் நுண்ணிய மனநிலையை மிக சாதரணமாக சொல்லிவிடுகிறார். இம்மாதிரி நாவல் முழுக்க வியப்புகளை அள்ளி தெளித்தபடியே செல்கிறது. ஒரு இடத்தில் கூட தொய்வெண்பதெயில்லை.

நிச்ச‌ய‌மாக‌ எல்லோரும் ப‌டிக்க‌வேண்டிய‌ புத்த‌க‌ம்.

- o0o -

No comments: