Thursday, January 14, 2010

புத்தகக் கண்காட்சி


புத்தக கண்காட்சிக்கு புனேயில் உள்ளதால் நான் செல்லவில்லை. ஆனால் அதைப் பற்றிய செய்திகள் மீள மீள கிடைத்தபடியே உள்ளன. எழுத்தாளர்களும், வலைபதிவர்களும் தொடர்ந்து வலையில் எழுதியபடி உள்ளார்கள். விதவித சந்தோசங்கள், மகிழ்ச்சிகள், பூரிப்புகள் என்று அவர்களின் அனுபவங்கள், கடந்து செல்லும் நீண்ட புகைவண்டி காண்பதுபோன்ற ஆயாசமும், குதுகூலமும் ஒருங்கே ஏற்படுகின்றன.

இது ஒரு காலாசார நிகழ்வென்றும், ஒரு சமூக மாற்றமென்றும், தமிழர்களின் ஒரு முக்கிய திருவிழாவாகவும் ஆகிவிட்டதென்றும் எல்லா எழுத்தாளர்களும் சத்தியம் செய்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். டிவியின் வருகை, தமிழர்களின் வாங்கும் திறன் அதிகரித்தது, போன்ற இன்னும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதே மாதிரியான கருத்துகள் போன ஆண்டும் தெரிவிக்கப்பட்டது.

எதுவானாலும் ஒரு நல்ல நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் இனிதே வரவேற்ப்போம், அது நம் கடமையும் கூட.

- o0o -

No comments: