Friday, April 23, 2010

இன்று உலக‌ புத்தக தினம்


ஆங்கில கவிஞரும் நாடகாசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளான இன்று புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது (1995லிருந்து பதிப்பக காப்புரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது).

தண்ணி அடிப்பவனையும் கஞ்சா அடிப்பவனையும் பார்பதுபோல் புத்தகம் படிப்பவனை பார்க்கும் இந்த சமூகத்தில் புத்தக தினத்தை எப்படி கொண்டாடிவிட முடியும். இருந்தாலும் சந்தோஷமாக கைகுலுக்கலாம், புத்தக‌ங்களை பரிசளிக்கலாம். கேலிபேசும் மனிதர்களை மறந்து மலையாள கவிஞர் குஞ்சுண்ணி எழுதிய கவிதையை நினைவில் கொள்லலாம்.

வாசித்தாலும் வளர்வீர்கள்
வாசிக்காவிட்டாலும் வளர்வீர்கள்
வாசித்தால் விளைவீர்கள்
வாசிக்காவிட்டால் வளைவீர்கள்.


-o0o-

No comments: