Thursday, April 29, 2010

நகரத்திற்கு வெளியே - சிறுகதை தொகுப்பு


விஜய் மகேந்திரன் எழுதியள்ள சிறுகதைகளின் தொகுப்பு 'நகரத்திற்கு வெளியே'. இது அவரது முதல் சிறுகதை தொகுப்பாக இருக்கும். மிக குறைந்த சிறுகதைகளை (10 சிறுகதைகள்) கொண்ட இத்தொகுப்பு எல்லா சிறுகதை ஆசிரியர்களின் முதல் தொகுப்பு போல குறைநிறைகளை கொண்டுள்ளது. சில சிறுகதைகள் கதைகளாக உருகொள்வதற்கு முன்பாகவே கீழிறங்கிவிட்டதாக தோன்றினாலும், வேறுசில கதைகள் நல்ல தரத்துடன் உள்ளன. குறிப்பாக ‍‍புயல்மழை சின்னம், நகரத்திற்கு வெளியே, சனிபெயர்ச்சி போன்றவைகள். அவைகள் கூட ஜனரஞ்சக தளத்தில் இருப்பதாக சில சமயம் தோன்றினாலும், கதைகளனும் அதன் திருப்பங்களும் மிக புதியவையே. நகரத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் இக்கதைகளை நாம் எங்கே செல்கிறோம் என பதபதைக்க வைக்கினறன. ஒரு நல்ல தொகுப்பு. 
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் வெற்றிகளை பெற விஜய் மகேந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.

No comments: