Tuesday, October 19, 2010

படிக்க நினைத்திருக்கும் நாவல்கள், நூல்கள்


படிக்க நினைத்திருக்கும் நாவல்கள், நூல்கள் என்று படிக்காமல் விடுபட்டுப்போன‌ முக்கியமான நூல்களின் ஒரு லிஸ்ட் எப்போதும் என் வசம் இருக்கும். சிலிகான் ஷெல்ப்‍பின் ஒரு இடுகையை பார்த்தும். என் லிஸ்டை எழுதிப் பார்க்கலாமென்று தோன்றியது. இந்த புத்தக கண்காட்சியில் சென்னை வந்து வாங்கிவிடலாமென்றும் ருக்கிறேன்.

நாவல்கள்
1.        தலைமுறைகள் - நீல. பத்மநாபன்
2.       பள்ளி கொண்டபுரம். - நீல. பத்மநாபன்
3.       பதினெட்டாவது அட்சக் கோடு - அசோகமித்திரன்.
4.       வானம் வசப்படும் - பிரபஞ்சன்.
5.       மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்.
6.      ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி.
7.       ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்.
8.       சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்.
9.       புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்.
10 .    கடலுக்கு அப்பால் - ப.சிங்காரம்
11.     சிதறல்கள் - பாவண்ணன்.
12.     கள்ளம் - தஞ்சை பிரகாஷ்.
13.     பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
14.    என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
15.    ஆரோக்கிய நி்கேதனம் - தாராசங்கர் பானர்ஜி

பிற‌

1.  தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் - நா.வானமாமலை
  1. குட்டி இளவசரன் - அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி பிராஞ்சு
  2. வியாசமகாபாரதம் - வர்தமானன் பதிப்பகம்
-o0o-